;
Athirady Tamil News

’இனவாதத்தை தூண்டும் தமிழ் டயஸ்போரா’ !!

0

இலங்கையில் இனவாதத்தை தூண்டுகின்ற விடயங்களில் தமிழ் புலம்பெயர் அமைப்புகள் செயற்படுவதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், காலி முகத்திடல் போராட்டக் களத்தில் காட்சிப் படுத்தப்படும் சில இனவாத பதாகைகள் குறித்து வினவியபோதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வந்த பின்னர், நாட்டின் அனைத்து இன மக்களையும் இணைத்துக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்தோம். யுத்தத்தின் பின்னரும் சில நேரங்களில் இலங்கையிலிருந்து வெளியேறிய சில குழுக்கள், சர்வதேசத்தையும் இணைத்துக்கொண்டு இனவாதத்தை மீண்டும் தோற்றுவிக்க முயற்சிக்கும் போது, நாம் ஜெனீவாவுக்கு சென்று அதற்கு எதிராக குரல் கொடுத்தோம்“ என்று குறிப்பிட்டார்.

“காலி முகத்திடல் போராட்ட களத்திலிருந்து வெளிவரும் சில கருத்துகளிடையே சிலர் இதனை தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றமையை நாம் அவதானிக்கின்றோம்.
உதாரணமாக அங்குள்ள அமரர் பண்டாரநாயக்கவின் சிலையின் கண்களை அங்கிருக்கும் சில இளைஞர்கள் கட்டுவதற்கு சில தினங்களுக்கு முன்னர், பிரித்தானியாவின் தமிழ் கார்டியன் என்ற இணையத்தில் பண்டாரநாயக்கவின் சிலையை உடைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது பண்டாரநாயக்க சிலையின் கண்கள் கட்டப்பட்டுள்ளன“ என்றார்.

“எனவே இந்த இரண்டு சம்பவங்களுக்குமிடையில் தொடர்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். எனவே புத்திசாலியான மக்களிடம் இந்த விடயங்கள் குறித்து தெளிவாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்“ என்று கூறினார்.

அரசாங்கம், குறித்த போராட்டக்காரர்களுக்கு ஜனநாயக ரீதியான வாய்ப்பை வழங்கியுள்ளது. எனவே அதில் கலந்துகொள்ளும் மக்களும் புத்திசாதுரியத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

300 மில்லியன் யுவான் வழங்க சீனா தீர்மானம் !!

ஜனாதிபதி மாளிகை பிக்குகளால் முற்றுகை !!

காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற பொலிஸார் முயற்சி!! (படங்கள்)

புதிய பிரதமர் குறித்து பசில் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!!

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 சேர்ந்தது !!

சீனா ஒத்துழைக்காவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு கேள்விக்குறியாகலாம் – இலங்கைக்கு எச்சரிக்கை!!

சுதந்திர சதுக்கத்தில் சங்க மாநாட்டுக்கு ஏற்பாடு !!

புதிய பிரதமர் – இடைக்கால அரசாங்கத்துக்கு ஜனாதிபதி இணக்கம் !!

காபந்து அரசாங்கத்தை அமைத்து தேர்தலை நடத்தவும் !!

அலரிமாளிகை முன்பாக பதற்றம் !!

நாமல் விடுத்துள்ள கோரிக்கை !!

“பதவியில் இருந்து நீக்காவிடின் பங்கேற்க மாட்டோம்” !!

இனி நகரங்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு !!

ஜனாதிபதி, பிரதமருக்கு சஜித் வழங்கியுள்ள ஆலோசனை !!

விமானப் பயணிகள் நடந்து செல்கின்றனர் !!

நாமல் பதிவிட்ட ட்வீட்… ஜனாதிபதிக்கா? பிரதமருக்கா?

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒரு வார கால அவகாசம்!!

ஜனாதிபதி , அரசாங்கத்தை பதவி விலக கோருபவர்களுக்கு கூட்டமைப்பு ஆதரவு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.