;
Athirady Tamil News

நொய்டா அருகில் கார் விபத்து- 5 பேர் பலி…!!

0

உத்தரப்பிரதேசத்தில் இன்று காலை 5 மணியளவில் ஆக்ராவிலிருந்து நொய்டாவிற்கு ஏழு பேர் மகேந்திரா போலேரோ காரில் சென்றுள்ளனர். அப்போது கிரேட்டர் நொய்டா பகுதி யமுனா விரைவுச்சாலையில் சென்ற போது, ஜீவர் சுங்கச்சாவடியின் அருகில் காரானது எதிரே சென்ற லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த காரில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் மகராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.