;
Athirady Tamil News

மின்வெட்டு சம்பவம் தொடர்பில் இருவர் பணி நீக்கம்!!

0

மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய மின்சார சபையின் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த வருடம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பினால் ஏற்பட்ட மின்வெட்டு சம்பவம் தொடர்பில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான சம்பவம் தொடர்பில் மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொறுப்பு அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.