;
Athirady Tamil News

சிறப்பாக நடைபெற்ற, “புளொட் சுவிஸ்ன் 36 வது வீரமக்கள் தின” -2025- நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

சிறப்பாக நடைபெற்ற, “புளொட் சுவிஸ்ன் 36 வது வீரமக்கள் தின” -2025- நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் கேர்ளபிங்கென் எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

புளொட் சுவிஸ் மூத்த உறுப்பினரும், நிர்வாகப் பொறுப்பாளருமான தோழர் லெனின் எனும் செல்வபாலன் அவர்களினதும், அவரது குடும்பத்தினதும் முழுமையான ஏற்பாட்டில் புளொட் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான சுவிஸ் பொறுப்பாளர் தோழர். சுவிஸ்ரஞ்சன் அவர்கள் ஆரம்பித்து வைத்து தலைமை தாங்கி தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் “மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஸ்தாபகர்களில் ஒருவரும், மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், கழகத்தின் செயலதிபருமான தோழர்.உமாமகேஸ்வரன் அவர்களையும், அவரது வழிகாட்டலில் தம்முயிரை ஈர்ந்த கழகக் கண்மணிகளையும் மற்றும் அனைத்து இயக்கப் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவுகூர்ந்து வருடாவருடம் நடாத்தப்படும் வீரமக்கள் தின நிகழ்வானது

வழமை போல் இவ்வருடமும் புளொட் சர்வதேச அமைப்புக்கள் சார்பாக சுவிஸ் அமைப்பின் சார்பில் இன்றையதினம் இங்கு நினைவு கூறப்படுகிறது, அத்துடன் நாம் வழமை போல் பிரமாண்டமாக நடத்தாவிடிலும், சில சூழ்நிலைகளால் அவசர அறிவித்தலாக அறிவித்த போதிலும், பொதுமக்கள் தாமாக முன்வந்து கலந்து கொண்டது மிகவும் சிறப்பு* என்பதைக் கூறி தோழர் ரஞ்சன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இதன் முதல்நிகழ்வாக “ஆகுதியாகிய அனைவருக்குமான” தீபச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல் நிகழ்வு நடைபெற்றது. தீபச்சுடர்களை புளொட் சுவிஸ் நிர்வாகப் பொறுப்பாளர் தோழர். செல்வபாலன், ஆரம்பகால முன்னாள் புளொட் உறுப்பினர் தோழர்.லிங்கன் (லங்கேந்தால்) அவர்கள் முதலில் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து புளொட் சுவிஸ் உப நிர்வாகப் பொறுப்பாளர் தோழர்.ரமணன், புளொட் சுவிஸ் தோழர் பேர்ண் தயா, ஆகியோர் தொடர்ந்து ஏற்றி வைத்தனர். தொடர்ந்து கலந்து கொண்டோரினால் நினைவுத்தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

அடுத்து மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து வீரமக்களும் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஒருநிமிட அமைதி வணக்கம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைவரையும் நினைவு கூர்ந்து மலரஞ்சலி நிகழ்வை தோழர்கள் ஆரம்பித்து வைக்க கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் நடத்தினர்.

இதனையடுத்து அனைவரையும் வரவேற்று தலைமையுரையையும், நன்றியுரையையும் சுவிஸ் பொறுப்பாளரான புளொட் ஆரம்பகால உறுப்பினர் தோழர்.ரஞ்சன் நிகழ்த்தினார். அதன்போது *நாம் வழமையாகவே வருடாவருடம் பல நிகழ்வுகளை நடத்தி பிரமாண்டமாக வீரமக்கள் தின நிகழ்வை செய்வது வழமை, ஆயினும் இம்முறை சந்தர்ப்ப சூழ்நிலைகள், உடல்நிலைகள் போன்ற பல்வேறு காரணங்களினால் இதனை இம்முறை செய்வதா? இல்லையா? எனப் பலவாறு சிந்தித்து இருந்தோம், ஆயினும் தலைமையை சேர்ந்தவர்களின் அறிவுரைக்கு ஏற்ப, வீரமக்கள் தின நினைவேந்தலை நடாத்த இறுதியாகத் தீர்மானித்து அறிவித்து இருந்தோம், ஆயினும் நாம் எதிர்பாராத வகையில் இறுதி நேரத்தில் அறிவித்தும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தது மகிழ்வைத் தரும் அதேவேளையில் இதுக்கான முழுஎற்பாட்டையும் முன்னின்று செய்த தோழர்.செல்வபாலன் மற்றும் அவரது குடும்பத்துக்கும் நன்றி*

இதன்பின்னர் அனைவருடனுமான கலந்துரையாடலுடன் வீரமக்கள் தின நினைவேந்தல் நிகழ்வு முடிவுக்கு வந்ததுடன், தோழர் செல்வபாலனின் இல்லத்தில் அனைவரும் வரவழைக்கப்பட்டு மாலைநேர உணவு வழங்கப்பட்டது.

அதேவேளை தனது இறுதிமூச்சு வரை கழகத்துக்காகவே வாழ்ந்து, கழக சொத்துக்களை கழகத்துக்கே அர்ப்பணிக்க முன்வந்த அமரத்துவமடைந்த தோழர்.ஆர்.ஆர் அவர்களின் நினைவாக வாழைக்கன்று ஒன்றினை தோழர்.செல்வபாலனின் வாசல் ஸ்தலத்தில் புளொட் சுவிஸ் பொறுப்பாளர் தோழர் ரஞ்சனுடன் இணைந்து தோழர்.ரமணனும் கடந்த வருடம் நாட்டி வைத்தது சிறப்பம்சம் என்பதுடன், அதனையும் அங்கு வந்த அனைவரும் நினைவு கூறி வாழ்த்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அங்கு வந்த கழகத் தோழர்கள் ஆதரவாளர்கள், பொதுமக்களுக்கு கழக சுவிஸ் கிளையின் உப நிர்வாகப் பொறுப்பாளர் தோழர்.ரமணன் நன்றி தெரிவித்தார்.

சிறப்பாக நடைபெற்ற, “புளொட் சுவிஸ்ன் 36 வது வீரமக்கள் தின” -2025- நிகழ்வு.. (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.