;
Athirady Tamil News

புங்குடுதீவில் நடைபெற்ற இளையோருக்கான உதைபந்தாட்ட தொடர்!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு உதவும் உறவுகள் அமைப்பினரின் ஏற்பாட்டில் அண்மையில் புங்குடுதீவு பாரதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இளையோருக்கான ( இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கானது ) உதைபந்தாட்ட போட்டித்தொடரும் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டிகளும் நடைபெற்றன . தீவக வரலாற்றில் மிக நீண்ட வருடங்களுக்கு பின்னர் இளையோருக்கான இத்தொடரினை ஏற்பாடு செய்து இளையோரின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக உதவுகள் உறவுகள் அமைப்பினர் இப்போட்டித்தொடரினை ஏற்பாடு செய்திருந்தனர் .

ஆண்களுக்கான உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் புங்குடுதீவு அம்பாள் கழகத்தினரை எதிர்கொண்ட புங்குடுதீவு பாரதி விளையாட்டுக்கழகம் வெற்றிக்கனியை தட்டிச்சென்றிருந்தது .பெண்களுக்கான வலைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் புங்குடுதீவு நசரத் விளையாட்டு கழக அணியை எதிர்கொண்டு புங்குடுதீவு சென்.சேவியர் விளையாட்டு கழகம் வெற்றிபெற்றிருந்தது .

மேற்படி விளையாட்டு தொடரின் இறுதிநிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு .மாணிக்கவாசகர் இளம்பிறையன் , சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் பூமணி அம்மா அறக்கட்டளையின் செயலாளருமான திரு. விந்தன் கனகரத்தினம் , பிரபல தொழிலதிபர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி , வேலணை பிரதேசசபை உறுப்பினர் திரு .கருணாகரன் நாவலன் ஆகியோரும் , கௌரவ விருந்தினர்களாக சென்சேவியர் தேவாலய பங்குத்தந்தை நரேஷ் அடிகளார் , புங்குடுதீவு உலக மையம் செயலாளர் கருணாகரன் குணாளன் , ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .

மேற்படி சுற்றுப்போட்டித்தொடரின் வெற்றிக்கிண்ணங்களை அமரர் சுப்பிரமணியம் கருணாகரன் ( புங்குடுதீவு மணியம் ஸ்ரோர்ஸ் ) அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது புதல்வர் கருணாகரன் முரளிதரன் அவர்கள் வழங்கியிருந்தார் .
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.