;
Athirady Tamil News

ஜனாதிபதி மாளிகை பணம் தொடர்பில் அறிக்கை!!

0

ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளித்த ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிக பணம் தொடர்பான அறிக்கை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணத்தொகையை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தாமதம் ஏற்பட்டமை தொடர்பிலான அறிக்கையை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (12) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவின் இயக்குநர் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ். விக்ரமசிங்க இந்த சம்பவம் தொடர்பான தொலைபேசி அழைப்பு விவர அறிக்கைகளை பெற்று விசாரணைகளை மேற்கொண்டதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.