;
Athirady Tamil News

மீன் விற்பவர்களினால் பொது போக்குவரத்து பாதிப்பு!!

0

சட்டவிரோதமாக மீன் விற்பனையில் ஈடுபடுவதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியின் வீதியின் இரு மருங்குகள் முக்கிய சந்திகளில் எவ்வித அனுமதியும் இன்றி மீன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த 1 வருடமாக இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதனால் பிரதான வீதியில் பயணம் செய்பவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது தவிர அண்மைக்காலமாக இவ்வாறான மீன் விற்பனை வீதியை ஆக்கிரமிக்கும் அளவிற்கு சென்றுள்ளதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

புதிய சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு மீன் விற்பனை செய்யப்படாமல் வீதிகளில் மீன் விற்பனை தொடர்ந்த வண்ணம் உள்ளன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.