;
Athirady Tamil News

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்த கும்பல்- வாலிபர் உள்பட 3 பேர் கைது..!!

0

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் மலர். மலரின் உறவினர்கள் தமிழகத்தில் வசித்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலரை தொடர்பு கொண்டு தனக்கு கேரளாவில் ஏதாவது ஒரு வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட மலர், அந்த பெண்ணை கேரளா வருமாறு அழைத்தார். கேரளா வந்தால் அவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனை நம்பிய தமிழக பெண், கடந்த மாதம் 23-ந்தேதி தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலம் கண்ணூர் சென்றார்.

கண்ணூரில் தங்கியிருந்த தமிழக பெண், கண்ணூர் போலீசில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த தன்னிடம், மலர் வீடு மாறி செல்வதாக கூறினார். அதனை நம்பி நானும் அவருடன் சென்றேன். அங்கு சென்றதும் எனக்கு குளிர்பானம் கொடுத்தனர். அதில் மயக்க மருந்து கலந்துள்ளனர். அதனை குடித்ததும் நான் மயங்கி விட்டேன். அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் என்னை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர்.

கண்விழித்து பார்த்த பின்னர் தான் இந்த விவகாரம் எனக்கு தெரியவந்தது. இதில் என்னை அந்த வீட்டிற்கு அழைத்து சென்ற மலருக்கும் தொடர்பு உள்ளது. எனவே போலீசார் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். கண்ணூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தமிழக பெண் புகாரில் குறிப்பிட்டிருந்த மலரையும் பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஒரு வாலிபர் உள்பட 3 பேரை கண்ணூர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.