;
Athirady Tamil News

ரேசன் அரிசி கடத்தினால் கடை ஊழியர் பணி நீக்கம்..!!

0

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைப்பதிவா ளர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ரேசன் அரிசி கடத்தல் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க பறக்கும் படையினர் ரேசன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அரிசி கடத்தல் உறுதி செய்யப்பட்டால், உடனே கடை ஊழியரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கி அப்பணியாளரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்.இதை மண்டலத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கத்துக்கும் அறிவுறுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.