;
Athirady Tamil News

3000 சதுர கி.மீ. பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது – அதிபர் ஜெலன்ஸ்கி..!!

0

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட முயன்றது. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை தன்னில் சேர்த்துக் கொண்டுள்ள ரஷியாவுக்கு உக்ரைனின் இந்த நடவடிக்கை ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது. முதலில் உக்ரைனின் ராணுவ கட்டமைப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தாக்குதல் தொடுப்பதாகக் கூறிய ரஷியா பின்னர் மருத்துவமனைகள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள் என தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தியது.

உக்ரைன் படை வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்களும் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனாலும் தலைநகர் கீவை கைப்பற்ற வேண்டும் என்ற ரஷிய கனவு, உக்ரைனின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாமல் போனது. இதற்கிடையே, ரஷியாவின் பார்வை கிழக்கு உக்ரைன் மீது படிந்தது. டான்பாஸ் பகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என துடித்தது. அந்தப் பகுதியின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு பல நகரங்கள் ரஷியாவின் வசமாகின.

அந்த நகரங்களை மீட்டெடுக்க ரஷியாவுடன் உக்ரைன் தொடர்ந்து போரிட்டு வருகிறது. உக்ரைனில் கிழக்கு பகுதியில் ரஷியா வசம் போன முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டன. இதையடுத்து அங்கிருந்து ரஷிய படைகள் பின்வாங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பேசுகையில், இந்த மாத தொடக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பதிலடியை ஆரம்பித்ததில் இருந்து ரஷியாவிடம் இருந்து 3 ஆயிரம் ச.கி.மீ. பகுதியை உக்ரைன் மீட்டுள்ளது என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.