;
Athirady Tamil News

கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றி கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

0

கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றி கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் அரியாலையில் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வை வலியுறுத்தி இடம்பெற்றுவரும் 100 நாள் செயற்பாட்டில் 50 ஆவது நாளான இன்று (19) திங்கட்கிழமை அரியாலையில் பட்டம் ஏற்றி கவனயீர்ப்பு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சட்டதரணி அம்பிகா சிறிதரன் கலந்து கொண்டு வடக்கு கிழக்கு மக்களிற்கான அரசியல் தீர்வின் முக்கியத்துவம் பற்றியும் மக்கள் எவ்வாறான பங்களிப்புக்களை செய்யவேண்டும் என்பது தொடர்பாகவும் தெளிவுபடுத்தி பட்டங்கள் ஏற்றி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.