;
Athirady Tamil News

போதைப்பொருளுக்கு எதிரான ஆசிரியைக்கு உடன் இடமாற்றம்!!

0

யாழ்ப்பாணம் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் , போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த மாணவன் ஒருவனை மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பிய ஆசிரியை ஒருவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் தனது விசனத்தை வெளியிட்டார் .

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று இடம்பெற்ற , போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவித்ததாவது :

அண்மையில் பண்டதரிப்புப் பகுதியில் மாணவர் ஒருவர் போதைப் பாவனைக்கு அடிமையாகியமை ஆசிரியை ஒருவரால் அடையாளங்காணப்பட்டது.
உடனடியாக சாவகச்சேரியில் உள்ள மறுவாழ்வு சிகிச்சை நிலையத்துக்கு குறித்த ஆசிரியரால் அந்த மாணவன் அனுப்பப்பட்டுள்ளார் .

இந்த நிலையில் , குறித்த பாடசாலையின் அதிபர் பாடசாலையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில், குறித்த ஆசிரியை இடமாற்றலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக குறித்த ஆசிரியை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்று முறையிட்டுள்ளார் – என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.