;
Athirady Tamil News

கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல்.!! (படங்கள்)

0

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (21) காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கையில் கொவிட்- 19 தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக மூன்றாவது, நான்காவது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாவிடில் இறப்புக்கள் அதிகம் ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளதாக குறிப்பிடப்பட்டது. அத்தோடு பொதுமக்களுக்கு பைஸர் தடுப்பூசிகளை ஏற்றுதல் தொடர்பான அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வுகளையும் வழங்குமாறும் பிரதேச செயலாளர்களிற்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இக் கலந்துரையாடலில் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. கேதீஸ்வரன், சமுதாய வைத்திய நிபுணர் Dr. சிவகணேஷ் மற்றும் பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.