;
Athirady Tamil News

உலக வங்கியில் வேலை வாங்க 600 இ-மெயில் அனுப்பிய வாலிபர்..!!

0

இந்தியாவை சேர்ந்த வத்சல் நகதா என்பவர் உலக வங்கியில் பணி புரிய வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு இருந்தார். நேரு பல்கலைக்கழகத்தில் படித்த இவர் அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது தோல்வி மேல் தோல்விதான் ஏற்பட்டது. என்றாலும் வத்சல் நகதா முயற்சியை கைவிடவில்லை.

உலக வங்கியில் வேலை வாங்காமல் வீடு திரும்பக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். 600 தடவை அடுத்தடுத்து இ-மெயில் அனுப்பி வேலை கேட்டார். 80 தடவை போன் மூலமாகவும் முயற்சி செய்தார். அவரின் விடா முயற்சி வீண் போக வில்லை. இறுதியில் அவருக்கு உலக வங்கியில் வேலை கிடைத்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.