;
Athirady Tamil News

சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமா சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறிய தாயார்- போலீசில் புகார்..!!

0

கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமா. சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கக்கூடாது என பக்தர்கள் போராட்டம் நடத்தியபோது கோவிலுக்கு சென்று சர்ச்சையில் சிக்கியவர். அதன்பின்பு மாட்டு இறைச்சி குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். இதற்காக அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரெகானா பாத்திமாவின் தாயார் பியாரி ஆலப்புழா வடக்கு போலீசில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது மகள் வீட்டில் தங்கி இருந்தபோது தன்னை அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்ததாக கூறியிருந்தார். இதன் காரணமாக அவரது வீட்டில் இருந்து வெளியேறி உறவினர் வீட்டில் கடந்த 2 மாதமாக தங்கி இருப்பதாகவும், இதற்காக தனது உறவினர்களை ரெகானா பாத்திமா மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பாக ரெகானா பாத்திமா மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கூறியிருந்தார். இப்புகார் தொடர்பாக போலீசார் ரெகானா பாத்திமாவை போலீஸ் நிலையம் வரவழைத்தனர். பின்னர் அவரிடம் தாயாருக்கு இடையூறு செய்யக்கூடாது என எச்சரித்ததோடு இது தொடர்பாக அவரிடம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். பெண் சமூக ஆர்வலர் மீது அவரது தாயாரே புகார் அளித்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.