;
Athirady Tamil News

நேபாளத்தில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது..!!

0

நேபாள நாட்டில் இன்று இரவு 7.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் தொடர்ந்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. டோட்டி மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானது நினைவிருக்கலாம். இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.