;
Athirady Tamil News

தேசிய கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில் புத்தக விற்பனைக் கண்காட்சி!! (PHOTOS)

0

தேசிய கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில், தேசிய கல்வி நிறுவகத்தினால் அச்சிடப்பட்ட புத்தகக் கண்காட்சியும், புத்தக விற்பனை நிகழ்வும் இன்றையதினம் யாழ். மத்திய கல்லூரி ரொமைன் மண்டபத்தில் நடைபெற்றது.

விருந்தினர்கள் மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு, மங்கள விளக்கேற்றி வைத்து, இரண்டு நிமிட அக வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.

தேசிய கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் ஜே.பிறட்லி தலைமை தாங்கியதுடன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இக் கண்காட்சியில் தேசிய கல்வி நிறுவகத்தின் அச்சிடல் மற்றும் வெளியீடுகள் துறையின் பணிப்பாளர் கே.பிரபாகரன், மாகாண கல்வி உதவிப் பணிப்பாளர் ஆ. உதயகுமார், தேசிய கல்வி நிறுவகத்தின் பதவி நிலை அதிகாரிகள், வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பதவி நிலை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கண்காட்சியானது 18,19,20 ஆகிய திகதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் என்பதுடன் இதன்போது புத்தகங்கள் 20% விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.