;
Athirady Tamil News

2 பேருக்கு விளக்கமறியல்; 2 பேருக்கு பிணை !!

0

நிதி மோசடி குற்றச்சாட்டு குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொரளை சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோரை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, புதன்கிழமை (30) பிணையில் விடுவித்தார்.

மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திகோ நிறுவனத்தின் தலைவர் திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் உத்தரவை டிசெம்பர் 13ஆம் திகதிவரை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.