;
Athirady Tamil News

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒரே தலைமையின் கீழ் ஒன்று சேரும் முயற்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி வரவேற்கிறது.!!

0

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒரே தலைமையின் கீழ் ஒன்று சேரும் முயற்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி வரவேற்கிறது. அந்த முயற்சி வெற்றிபெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறது. தேர்தலை மையமாக வைத்து இணையாமல் தமிழர்களின் நலன் நோக்கியதாக இந்த ஒற்றுமை முயற்சி அமையவேண்டும் எனத் தமிழ் மக்களை போல நாமும் விரும்புகிறோம்.

எங்களையும் ஒரு தமிழ்த் தேசியக் கட்சியாக இணைத்துக் கொள்ளாமைக்கான காரணம் புரிந்துகொள்ளக் கூடியதே. அரசுடன் எமது கட்சியை இணைத்துக்கொள்ள வேண்டும் எனச் சுயநலமாகச் சிந்திக்கும் ஒரு சிலர் இன்னமும் எம்மத்தியில் உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அப்படியான ஒரு சிலரைத் தவிர, நாமும் தமிழ்த் தேசியவாதிகள் தான். மாவை சேனாதிராஜா தலைமையில் உருவாகவுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டமைப்பில் நாமும் இணைந்துகொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.

அனைவருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் புத்தாண்டு வாழ்த்துக்கள். இப்புதிய ஆண்டில் தமிழ் மக்களின் சில பிரச்சனைகளுக்காவது தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கொள்வோம்.

பரமசிவம் சிறீதரன்
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

You might also like

Leave A Reply

Your email address will not be published.