;
Athirady Tamil News

முறிகண்டி பிள்ளையார் அருகே தலைகீழாக கவிழ்ந்து கார் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்!

0

யாழ்ப்பாணம் ஏ-9 பிரதான வீதியில் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து குட்டிக்கரணம் அடித்து விபத்துக்குள்ளகியுள்ளது.

இந்த விபத்து காலை இன்று( 27) இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கழிவுநீர்க் கால்வாய்க்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

எனினும் காரில் பயணம் செய்தவர்கள் தெய்வாதீனமாக சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.

.

You might also like

Leave A Reply

Your email address will not be published.