;
Athirady Tamil News

உயரம் பாய்தலில் புங்குடுதீவு மாணவன் சாதனை!! (படங்கள் இணைப்பு)

0

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்று வருகின்ற 2023 ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் தோம்சன் இல்லத்தினை சேர்ந்த றேகன் றேனுஜன் எனும் மாணவன் உயரம் பாய்தலில் 1.78 மீற்றர் பாய்ந்து மைதான சாதனை படைத்துள்ளார் . புங்குடுதீவு பதினொராம் வட்டாரத்தினை சேர்ந்த செல்வன் றேனுஜன் கடந்த வருடம் நடைபெற்ற மாகாண ரிதீயிலான போட்டிகளில் கலந்துகொண்டு உயரம் பாய்தலில் இரண்டாவது இடத்தினை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

உயரம் பாய்தலில் மாத்திரமன்றி ஏனைய தடகளப்போட்டிகளிலும் றேனுஜன் பிரகாசித்துவருகின்றார். 2022 ம் ஆண்டில் நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டியில்
400 மீற்றர் ஓட்டப்போட்டியில் முதலிடத்தினையும் , 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப்போட்டியில் முதலாமிடத்தினையும் பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.