;
Athirady Tamil News

இரு பெண்கள் பாலியல் வன்புணர்வு – பின்னர் பெண்ணாக மாறிய நபர் – சிறை மாற்றம்!

0

இரு பெண்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் பெண்ணாக மாறிய நபர் பெண்கள் சிறையிலிருந்து ஆண்கள் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஐலா பிரைசன் எனும் நபர் ஸ்கொட்லாந்தின் இரு பெண்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சமயம் அவர் பெண்ணாக மாறி இருந்ததால் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இருப்பினும், பாலின மாற்றங்கள் ஸ்கொட்லாந்தின் பாராளுமன்ற சட்டங்களுக்கு ஏற்றது என்றாலும், ஐலா பிரைசன் விடயத்தில் குறித்த சட்டம் பொருந்தாது என ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.

தற்போது குற்றவாளியான பிரைசன் பெண்ணாக உள்ளபோதிலும், அவரின் மீது பாலியல் வன்புணர்வு குற்றம் இருப்பதால் அவரை பெண்கள் சிறையில் வைத்திருக்க முடியாது என ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், பிரைசன் பெண்கள் சிறையில் இருந்து ஆண்கள் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.