;
Athirady Tamil News

இளைஞர் தோட்ட நிர்வாக அதிகாரிகளால் தாக்கப்பட்டமைக்கு மனோ எம்.பி கண்டனம்

0

அவிசாவளை – புவக்பிட்டிய – எலிஸ்டன் தோட்டத்தில், தோட்ட நிர்வாக அதிகாரிகளால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்குத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தோட்டத்தில் உள்ள இந்து கிராமிய ஆலயம் ஒன்றை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட அதிகாரிகளுடன் ஏற்பட்ட முறுகலை அடுத்துக் குறித்த இளைஞர் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இது குறித்து தாம் உரிய காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், தற்போதைய சம்பவம் தொடர்பில் தாம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.