;
Athirady Tamil News

படையினரை பௌத்தவழிபாட்டுத்தலங்களில் இருந்து அகற்றவேண்டாம் – மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!!

0

படையினரை பௌத்தவழிபாட்டுத்தலங்களில் இருந்து அகற்றவேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வடக்குகிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்தவழிபாட்டு தலங்களின் பாதுகாப்பிற்கு என பணியில் அமர்த்தப்பட்டுள்ள படையினரை அங்கிருந்து அகற்றவேண்டாம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பௌத்தவழிபாட்டுத்தலங்களின் பாதுகாப்பை இருப்பை உறுதிசெய்யவேண்டியது என அரசாங்கத்தின் கடமை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்த காலம் தொடக்கம் வடக்குகிழக்கில் பௌத்த வழிபாட்டுத்தலங்களை பாதுகாப்பதற்கு உருவாக்குவதற்கு படையினர் மிகப்பெரிய பங்களிப்பைவழங்கியுள்ளனர் பௌத்த மத தலைவர்களிற்கு அனைத்துஉதவிகளையும் வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ள மகாநாயக்க தேரர்கள் இந்த பகுதிகளில் இருந்து படையினரை அகற்றுவது அந்த பகுதிகளின் அபிவிருத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.