;
Athirady Tamil News

19-ந்தேதி மெட்ரோ ரெயில்கள் இரவு 12 மணி வரை இயக்கப்படும்!!

0

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வருகின்ற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வெளிப்புற பங்குதாரர் மார்க் மெட்ரோ நிறுவனத்தின் சார்பில் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி (அன்பின் சிறகுகள்) 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு அருகில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதால் நிகழ்ச்சியை கண்டுகளிக்க வரும் மெட்ரோ ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 19-ந்தேதி இரவு 11 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவைகள் அன்று மட்டும் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள், 19-ந்தேதி மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்ச்சியை கண்டுகளிக்க மெட்ரோ ரெயில்களில் வரும் மெட்ரோ பயணிகள், கியூஆர் குறியீடு பயணச் சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி 20 சதவீத கட்டண தள்ளுபடியை பெற்றுகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாகன இணைப்பு சேவை 19-ந்தேதி டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் முதல் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும். அதன்படி, அனைத்து முனையங்களில் இருந்தும் (விமான நிலைய மெட்ரோ, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ, டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, பரங்கிமலை மெட்ரோ) கடைசி ரெயில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.