;
Athirady Tamil News

மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு!!

0

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் நாளை (23) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள மெதுவாக பணிபுரியும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தொழிற்சங்க தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.