;
Athirady Tamil News

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடிதாங்கி திருட்டு!! (PHOTOS)

0

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பு திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

தந்தை செல்வா சதுக்கத்தில் நீண்ட காலமாக நீர் இறைக்கும் மோட்டார் திருட்டும் இடம்பெறுவதாக தந்தை செல்வா சதுக்க பராமரிப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்

கிட்டத்தட்ட மூன்று தடவைக்கு ரூபா 75 ஆயிரம் பெறுமதியான நீர் இறைக்கும் மோட்டார் திருடப்பட்டுள்ளதாகவும் திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து திருட்டு இடம்பெறுவதாகவும், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள தந்தை செல்வா சதுக்க வளாகத்தில் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்,

You might also like

Leave A Reply

Your email address will not be published.