;
Athirady Tamil News

இலங்கையில் ஆபத்தான வைரஸ் ஒன்று பரவுகின்றது !!

0

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின் படி, இலங்கையில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இதனால் ஒருவருக்கு காய்ச்சல் இரு தினங்களுக்கு மேல் காணப்படுமாயின், டெங்கு பரிசோதனை நடத்துவதன் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

டெங்கு 3 க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியோ, ஆன்டிபாடிகளோ இல்லை என கூறியுள்ள அவர், இந்த வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.