;
Athirady Tamil News

உயர் நீதிமன்றுக்கு மஹிந்த உறுதி !!

0

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் அரசாங்க பங்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரை விற்பனை செய்யப் போவதில்லை என்று நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, உயர்நீதிமன்துக்கு திங்கட்கிழமை (08) உறுதியளித்துள்ளார்.

பங்குகளை மாற்றுவதற்கு எதிராக இரண்டு தொலைத்தொடர்பு தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் சமர்ப்பித்த மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.

நிதியமைச்சின் செயலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்தப் பங்குகளை மாற்றும் செயல்முறை முற்றிலும் சட்டபூர்வமானது என்று மன்றுக்கு அறிவித்தார்.

எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதியன்று மனு பரிசீலிக்கப்படும் வரை பங்குகளை விற்பனை செய்யப்போவதில்லை என்று மன்றுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.