உலக நாடுகளின் மவுனத்திற்கு கண்டனம்: ரஷ்யா மீது கடும் தடைகள் கோரிய ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீதான தொடர் வான்வழித் தாக்குதலை தொடர்ந்து உலக நாடுகளின் மவுனத்தை ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா மோதல்
உக்ரைன் – ரஷ்யா இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளும் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட உக்ரைன் மீது ரஷ்யா கிட்டத்தட்ட 367 ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
உலக நாடுகள் மீது கடும் விமர்சனம்
இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் மவுனத்தையும், பிற உலக நாடுகளின் மவுனத்தையும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாக விமர்சித்தார்.
ரஷ்யாவுக்கு எதிராக மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அமெரிக்காவின் மற்றும் உலகின் மவுனம் புதினை மட்டுமே ஊக்குவிக்கிறது” என்று ஜெலன்ஸ்கி கூறினார். “ரஷ்யாவின் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலும், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க போதுமான காரணமே.”
ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக், தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். “அழுத்தம் இல்லாமல் இங்கே எதுவும் மாறாது” என்று யெர்மக் கூறினார்.