தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குக : அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை.!!!

எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் அவர்களின் இணைகரத்தின் அயற்கோணங்கள்’ சிறுகதைத் தொகுப்பின் அறிமுக நிகழ்வு கடந்த 24.05.2025 சனிக்கிழமை மாலை அரங்கம் நிறைந்த நிகழ்வாக எங்கட புத்தகங்கள் இல்லத்தில் இடம்பெற்றது.
சற்குணம் சத்தியதேவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கவிஞர் மாதவி உமாசுதசர்மா அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்கி இருந்தார்கள்.
புலவர் ம. பார்வதிநாதசிவம் எழுதி சோலைக்குயில் மாணவர்களால் சிறப்பாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு இனிதே ஆரம்பமாகியது.
நூல் விமர்சன உரைகளை, யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஈஸ்வரநாதபிள்ளை குமரன் அவர்களும், யா/ கீரிமலை நகுலேஸ்வர மகாவித்தியாலய ஆசிரியை தமயந்தி கணேசானந்தன் அவர்களும், யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் த. அஜந்தகுமார் அவர்களும், ஏற்புரையினை நூலாசிரியர் கோகிலா மகேந்திரன் அவர்களும் நிகழ்த்தினார்கள்.
எங்கட புத்தகங்கள் இல்ல ஒருங்கிணைப்பாளர் குலசிங்கம் வசீகரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.