;
Athirady Tamil News

யாருக்கும் பெரும்பான்மை இல்லை – துருக்கியில் வரும் 28ம் தேதி 2வது சுற்று அதிபர் தேர்தல்!!

0

துருக்கியில் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகின. துருக்கியை பொறுத்தவரை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற வேண்டும்.

இதில் அதிபர் எர்டோகன் சுமார் 49.50 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட கெமால் கிலிக்டரோக்லு 44.79 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் 28-ம் தேதி அதிபர் தேர்தலின் 2-வது சுற்று நடைபெறும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.