;
Athirady Tamil News

மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு!!

0

மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் எனவும் எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த விலைகுறைப்பின் இறுதி முடிவுகள் தொடர்பில் திறைசேறி அலுவலர்களுடன் கலந்துரையாடி உள்ளோம். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதால் விலைகள் குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

டொலரின் பெறுமதி உயர்ந்த போது மருந்துகளின் விலைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு ஏற்பட்டது. இப்போது ரூபாயின் பெறுமதி உயர்வதால் அதன் பயனை பொதுமக்களுக்குப் பெற்றுத்தர விரும்புகின்றோம் அமைச்சர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.