;
Athirady Tamil News

கொரோனா தினசரி பாதிப்பு 473 ஆக குறைந்தது!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 782 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று 500-க்கும் கீழ் சரிந்தது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 473 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 86 ஆயிரத்து 934 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 958 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 47 ஆயிரத்து 472 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 7,623 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் நேற்று டெல்லியில் 2 பேர், அரியானா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என 6 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட ஒரு மரணம் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 839 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.