;
Athirady Tamil News

ஆந்திராவில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து- 6 பேர் உயிரிழப்பு!!

0

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இன்று டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பத்திபாடு மண்டலத்தில் இருந்து பொன்னூர் மண்டலத்திற்கு டிராக்டரில் பயணம் மேற்கொண்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.