;
Athirady Tamil News

வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் குறித்து அதிர்ச்சி தகவல் !!

0

வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது என தொிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் குறித்த 7 பெண்களும் விபச்சாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.