;
Athirady Tamil News

யாழில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டத்தில் இளைஞன் உயிரிழப்பு!!

0

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டத்தில் அதில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், வடமராட்சி முள்ளி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இவ் விபத்தில், ஜெ.ஜெயந்தன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றிக்கொண்டு , கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் மிக வேகமாக பயணித்த கப் ரக வாகனம் முள்ளி சந்தி பகுதியில் திருப்ப முற்பட்ட வேளை ,வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.

அதன் போது வாகனத்தின் பின்னால் , மணலில் இருந்து பயணித்த குறித்த இளைஞன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

அதனை அடுத்து அவரை அங்கிருந்து மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.