;
Athirady Tamil News

வீட்டார் மரணச்சடங்குக்கு சென்றிருந்த வேளை வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு!!

0

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 06 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர்.

வீட்டார் மரணச்சடங்கு ஒன்றுக்கு சென்று விட்டு , வீடு திரும்பிய வேளை வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

வீட்டினுள் சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி காணப்பட்டதுடன் , வீட்டில் வைத்திருந்த 06 பவுண் நகை திருட்டு போய்யுள்ளமையை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.