;
Athirady Tamil News

டெல்லி அமைச்சரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, சௌரப் பரத்வாஜ் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமக்க முடிவு?

0

டெல்லி அமைச்சரவையில் நியமனம் செய்வதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோரின் பெயர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருந்த மனிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொண்ட நிலையில், காலியாக உள்ள இரண்டு பதவிகளுக்கும் புதிய அமைச்சர்களை நியமனம் செய்யும் பணி நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2021-22ம் ஆண்டுக்கான டெல்லி மதுபான கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஆம் ஆத்மியின் துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். இதற்கு முன்பாக, பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்க இயக்குனரகத்தால் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.