;
Athirady Tamil News

யாழில் மர்மமாக உயிரிழந்த நபர் ; கொலையா? தீவிர விசாரணையில் பொலிஸார்

0

யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டது.

இராசாவின் தோட்டம் – முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய அழகரத்தினம் கிஸ்ரிபால்ராஜ் என்பவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் சடலம், முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்து காணப்படுகிறது.

இது இயற்கை மரணமா அல்லது கொலையா என இதுவரை தெரியவரவில்லை.

இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.