;
Athirady Tamil News

தாவடியில் கத்தி குத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – இளைஞன் கைது

0

யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாவடி பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் , சுதுமலை பகுதியை சேர்ந்த நேசராஜன் சர்வேந்திரன் (வயது 51) என்பவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.