;
Athirady Tamil News

நாட்டில் ஆறு பகுதிகளில் இன்று சூரியன் சுட்டெரிக்கும்!

0

நாட்டில் ஆறு பகுதிகளில் இன்று (29) பகல் வேளையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட குமுளமுனை, படினத்தம்பூர், ஆலங்குளம், தண்ணியூற்று , வற்றாப்பளை ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்.

அதேவேளை தெற்கு பகுதிகளில் செப்டம்பர் மாதம் ஏழாம் திகதி வரை சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.