திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் 64 ஆம் கட்டை பகுதியில் மூதூரிலிருந்து திருகோணமலைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மாடு குறுக்கறுத்ததன் காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (7) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சாரதி சிறு காயங்களுடன் தெய்வீகத்தனமாக உயிர் தப்பியுள்ளதுடன் மாட்டிற்கும் எந்த ஆபத்து ஏற்படவில்லை. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
