;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1813558.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

கனடாவில் தீ விபத்தால் பல இந்தியர்கள் பலி ; நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்

0

கனடா நாட்டில் உள்ள பிராம்டன் நகரின் மேக் லாக்லின் சாலை மற்றும் ரீமெம்பரன்ஸ் சாலை சந்திக்கும் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கீழ் தளத்தில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். மேல் தளத்தில் வசித்தவர்களில் 4 பேர் தீயில் சிக்கி உடல் கருகினர்.

கர்ப்பிணியான ஆரஷ்வீர் கவுர் என்ற பெண் உயிர் பிழைக்க ஜன்னலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார்.

எனினும் கருவில் இருந்த குழந்தை இறந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். தீயில் கருகியவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

தீ விபத்தில் காயமடைந்த ஒரு சிறுவன் உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.