;
Athirady Tamil News

தென் கொரியாவில் ‘ஏ.ஐ. -உருவாக்கம்’ என புதிய சட்டம்; மீறினால் அபராதம்

0

தென் கொரியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் விளம்பரங்களை ‘ஏ.ஐ. -உருவாக்கம்’ என கட்டாயம் குறிப்பிட புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

தென் கொரியாவில், கடந்தாண்டில் 96,700 விளம்பரங்களும், நடப்பாண்டில் செப்டம்பர் வரை 68,950 விளம்பரங்களும் போலி என்று கண்டறியப்பட்டன.

இதையடுத்து புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் விளம்பரங்களில், ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால், இனி அதை விளம்பரத்தில் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த புதிய சட்டம் வரும் ஜனவரி முதல் அமுலுக்கு வருகிறதாகவும் மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் கூறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.