;
Athirady Tamil News

இறுதி சடங்கு சென்று வீடு திரும்பியவர் நடுவழியில் கொலை!

0

களுத்துறையில் மத்துகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வோகன்வத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. வோகன்வத்த பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவரே கொலைசெய்யப்பட்டுள்ளார். கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனிப்பட்ட தகராறு
கொலை செய்யப்பட்ட நபர் இறுதி சடங்கு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பி செல்லும் போது அவ்வழியில் இருந்த நபர் ஒருவரினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைசெய்யப்பட்டவரின் சடலம் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.