;
Athirady Tamil News

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் அவசமாக தரையிறக்கம்!

0

UPDATE: கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவிலிருந்து இன்று சனிக்கிழமை (11) காலை துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட ‘A330’ ரக பயணிகள் விமானம் ஒன்றுடன் பறவையொன்று மோதியுள்ளது.

பறவை மோதியதால் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையைத் தொடர்ந்து, விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்காக விமானத்தின் எடையைக் குறைக்கும் நோக்கில், சிலாபம் வான்பரப்பில் மிகக் குறைந்த உயரத்தில் வட்டமிட்டவாறு விமானம் தற்போது எரிபொருளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.