;
Athirady Tamil News

கிரீன் கார்ட் இருந்தாலும் வெளிநாட்டவர்களுக்கு இனி இது கிடையாது; பதற விடும் ட்ரம்பின் அறிவிப்பு

0

அமெரிக்காவில் வரும் மார்ச் 1 முதல் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு (Green Card holders) வணிக கடன்கள் கிடையாது என அமெரிக்க சிறுதொழில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது ஒரு வணிகக் கடனுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் நேரடி அல்லது மறைமுக உரிமையாளர்கள் அனைவரும் நூறு சதவீதம் அமெரிக்கக் குடிமக்களாகவோ அல்லது அமெரிக்கத் தேசியவாதிகளாகவோ இருக்க வேண்டும். நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் இனி அரசு உதவிபெறும் வணிகக் கடன்களைப் பெற முடியாது.

இதற்கு முன்பு ஒரு நிறுவனத்தில் 5% வரை வெளிநாட்டினர் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் பங்கு வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட விதிவிலக்கு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் தரவுகளின்படி, 2024 நிதியாண்டில் கிரீன் கார்டு (Green Card) பெற்ற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில், இந்தியா உலகளவில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.

ஜூன் 2025-ல் அமெரிக்க வர்த்தக சபையின் புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 40% சிறுதொழில் உரிமையாளர்கள் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.