;
Athirady Tamil News

நாட்டிற்குள் அதியுயர் ரோல்ஸ் ராய்ஸ் காரினை இறக்குமதி செய்த மற்றுமொரு கோடீஸ்வரர்

0

இலங்கையின் முன்னணி தொழிலதிபரும், ரத்னா குழும நிறுவனங்களின் உரிமையாளருமான மைத்ரிபால லங்கேஸ்வர உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரை கொள்வனவு செய்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஆடம்பர கார் இறக்குமதி
இந்த கார் 2025 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் (2026 Rolls-Royce Cullinan Series II சூப்பர் suv ) ஆகும்.இந்த கார்களில் 25 கார்கள் மட்டுமே, நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடம்பர காரினையடுத்து , பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள 6 அல்லது 7 இருக்கைகள் கொண்ட ஜெட் விமானத்தையும் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விமானம் வணிக வணிக பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆடம்பர உலங்குவானூர்தி கொள்வனவு
இவர் சமீபத்தில் சிங்கப்பூர் ஏர்ஷோ 2026 கண்காட்சியில் கலந்து கொண்டு தனது விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக ஒரு புதிய உலங்குவானூர்தியை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை அவர் தனது சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது பரபரப்பான பயணத் தேவைகளைக் கொண்ட பிற வணிகத் தலைவர்களுக்கும் வழங்கும் வகையில் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.