;
Athirady Tamil News

கோமா நிலையில் இருந்த கமேனி மனைவி மரணம்..!

0

ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்கலில் படுகாயமடைந்த கமேனியின் மனைவி உயிரிழந்தார். இந்தத் தகவலை ஈரானிய ஊடகங்கள் இன்று(மார்ச் 2) வெளியிட்டுள்ளன.

அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் சனிக்கிழமை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தின.

ஈரான் மீது கடந்த சனிக்கிழமை இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து தாக்குதலைத் தொடங்கியதும், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் மிகப்பெரிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அதில் அதிபரின் மாளிகை, ஈரான் தலைமை மதகுரு இல்ல வளாகம் ஆகியவையும் அடங்கும்.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா். அவரது கொலைக்குப் பழிதீா்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.

இதனிடையே, கடந்த சனிக்கிழமை (பிப். 28) அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய துல்லியமான தாக்குதல்களில் கமேனியின் மனைவி மன்சூரே கொஜெஸ்தே (Mansoureh Khojasteh) காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றார். இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 78. கமேனிக்கும் மன்சூரே கொஜெஸ்தேக்கும் கடந்த 1964-இல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.